tamilnadu

தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக கோவை சி-2 காவல் நிலையம் தேர்வு

கோவை, ஜன. 23 – கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி-2 பந்தய  சாலை காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல்நிலை யத்திற்க்கான தகுதியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த  பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது கடந்த  2017 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் எல்லைக் குட்பட்ட ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட் டது. இந்நிலையில் மாநில அரசின் சார்பில் 2020 ஆம் ஆண் டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை  காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கோவை மாநகர காவல் துறையினர் மத்தியிலும் கோவை மாநகர பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது. சி-2 காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொது மக்களை வரவேற்கும் வகையில் வரவேற்பறையில் இருந்து,  சுத்திகரித்த குடிநீர், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை,  காவலர்களுக்கு ஓய்வரை, பெண்கள் மற்றும் ஆண்களுக் கான தனி லாக்கப், குற்ற பதிவேடுகளை காக்கும் அரை என பல்வேறு வசதிகள் செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.